பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது

published 2 years ago

பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது

கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா (வயது 26). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும். கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீசியாக வேலை பார்த்ததால் இங்கேயே தனி வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மேகலா பிரியா வேலைக்கு செல்லவில்லை. 

அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பார்த்தனர். ஆனால் மேகலாபிரியா போனை எடுக்கவில்லை. இதனால் ஊழியர்கள் நேராக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரத்தினபுரி போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேகலாபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேகலா பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது மேகலாபிரியா காதல் விவகாரத்தில் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது. மேகலாபிரியாவும், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபாலபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணியாற்றி வந்தார்.

பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர். மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் மேகலாபிரியாவுடன் பேசுவதையும் நிறுத்தி உள்ளார். சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசி உள்ளனர். 

அப்போது 2 பேருக்கும் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு தான் காதலன் தன்னை ஏமாற்றி விட்டார், எனவே உயிரோடு வாழக்கூடாது என முடிவு செய்து மேகலாபிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். 

அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேகலா பிரியா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியது பற்றி போலீசார் விசாரித்தனர். மேகலாபிரியா கொல்லிமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரது குலத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும் முன்பு ஆடைகள் இன்றி இருக்க விரும்புவார்களாம். அந்த சம்பிரதாயத்தின் படி தான் மேகலாபிரியா ஆடைகள் இன்றி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe