கோவையில் அதிகாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

published 2 years ago

கோவையில் அதிகாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

கோவை: கோவை கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஷீலா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தாங்கள் பயன்படுத்தும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல குடியிருப்பு வாசிகள் அவர்களின் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டுச் சென்றனர்.

இன்று காலை 4.30 மணியளவில் குடியிருப்பில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்துத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பற்றி எரிந்த தீயைப் போராடி அணைத்தனர். அதற்குள் 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் காவல்துறைடயினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களை யாராவது தீ வைத்து எரித்தார்களா? பெட்ரோல் அல்லது மின் கசிவு காரணமாகத் தீ பரவி மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானதா? என விசாரணை நடத்தி வருகிறனர்.

அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் தீ பற்றி எரிந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe