சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய மனு அளிக்கும் போராட்டம்

published 2 years ago

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய மனு அளிக்கும் போராட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி,  பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் சொத்து வரி உயர்வு தொடர்பாகப் பொதுமக்கள் இம்மாதம் 13-ம் தேதி வரைக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சொத்து வரியை உயர்த்தக் கூடாது என மனுக் கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி வருவாய்த்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினத்திடம் தங்களது மனுக்களை ஒவ்வொருவராக அளித்தனர்.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி கூறியதாவது:
"கடந்த 11ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்துவரியை 15 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தலாம் என மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களே  ஆன நிலையில், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 6 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலிருந்த இந்த சூழலில் உடனடியாக சொத்து வரி உயர்வு தேவையில்லை என்பதே எங்களது கருத்து.

தவிர்க்க முடியாத காரணத்தால் வரியை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் 15 சதவீதத்திற்குள்ளாக உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது, எனினும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரியை உயர்த்தினால் தான் மத்திய அரசு நிதி பெற முடியும் என்று சர்வாதிகாரப்போக்குடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளாட்சி மன்றத்தின் உரிமை. இந்த அளவு வரியை உயர்த்தினால் மக்கள் தாங்கமாட்டார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளோம். நடைபெற உள்ள நிதிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மக்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் கோவை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி, சுமதி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe