குன்னூரில் 5 இடங்களில் மண் சரிவு: பொதுமக்கள் அவதி

published 2 years ago

குன்னூரில் 5 இடங்களில் மண் சரிவு: பொதுமக்கள் அவதி

கோவை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சில தினங்களாகப் பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது.

அதனைத் தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது. மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

சாலைகளில் தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஓட்டுப்பட்டறை, உழவர் சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணாரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து சென்று மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் காண முடிந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe