கோவையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது

published 2 years ago

கோவையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது

கோவை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில் புலிக்குத்தியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 22), சமையல் கலைப் பட்டதாரி. இவர் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஞ்சித்குமார் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த ரஞ்சித்குமார் கோவைக்கு வந்தார். கோவையில் தங்கி இருந்தபோது சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில் 3 பேரிடம் 17 பவுன் மதிப்புள்ள செயின்களைப் பறித்தார். இந்த வழக்கில் சரவணம்பட்டி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

மேலும் ரஞ்சித் குமார் அன்னூர் காரமடை உள்ளிட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட ரஞ்சித்குமாரை சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தான் பறித்த நகைகளை புதுச்சேரி மற்றும் விருதுநகரில் அடகு வைத்து ஜாலியாக இருந்ததாகத் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஜே. எம். 4 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை வருகிறது. விசாரிக்கும்போது அவர் எங்கெல்லாம் நகைகளைப் பறித்தார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe