அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது

published 2 years ago

அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் சட்ட விரோதமாகத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடமான சந்தைப்பேட்டை விநாயகர் கோயில் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் நடராஜ் (51) மற்றும் ஆறுமுகம் என்பவரது மகன் நாகராஜ் (42) ஆகிய 2 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 லாட்டரி சீட்டுகள், கைப்பேசி-1 மற்றும் ரூபாய் 1600/- ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, மேற்படி இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe