கோவை அருகே 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபர் போக்சோவில் கைது

published 2 years ago

கோவை அருகே 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபர் போக்சோவில் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நஜிபுல் இஸ்லாம்(23). நேற்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமி தண்ணீர் கேட்டு வந்துள்ளார். சிறுமிக்குத் தண்ணீரைக் கொடுத்த வாலிபர், சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டிற்குள் இழுத்துச் சென்று முத்தம் கொடுத்து சிறுமியின் ஆடைகளைக் கழட்டியுள்ளார். 

இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போடவே, சத்தம் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த  பெண்கள் சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு நஜிபுல் இஸ்லாமை எச்சரித்துக் கண்டித்தனர். 

இந்த சம்பவம் நடந்து சற்று நேரத்தில் நஜிபுல் இஸ்லாம் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி அங்குள்ள முட்புதருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கவே பயந்த நஜிபுல் இஸ்லாம் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நஜிபுல் இஸ்லாத்தைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து 2 சிறுமிகளிடம் வாலிபர் பாலியல் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe