காரமடையில் நிலத்தகராறில் பெண் தற்கொலை: கணவரின் அண்ணன் கைது

published 2 years ago

காரமடையில் நிலத்தகராறில் பெண் தற்கொலை: கணவரின் அண்ணன் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

காரமடை: கோவை காரமடை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாபு என்கிற சுப்பிரமணியன் (வயது 41). இவரது மனைவி ராதா (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இடப்பிரச்சனை சம்பந்தமாகக் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பாபு, ராதாவைத் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது ராதா வீட்டில் சாணி பொடியைக் குடித்து மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பாபு, மனைவி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவரை மீட்டு காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தார்.  ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து  காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இடப்பிரச்சினை சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு ராதாவிற்கும், பாபுவின் அண்ணன், கோத்தகிரியைச் சேர்ந்த பழனிசாமி (60) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

அப்போது அவர் ராதாவைத் தாக்கியதால் மனவேதனை அடைந்தவர் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் பழனிசாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe