கோவை ஆலாந்துறை அருகே அரசுப்பேருந்து மோதி வாலிபர் பலி

published 2 years ago

கோவை ஆலாந்துறை அருகே அரசுப்பேருந்து மோதி வாலிபர் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கோவை செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 26), தொழிலாளி. இவர் ஆலாந்துறையைச் சேர்ந்த தனது நண்பர் சபரிகணேஷ் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாணி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்த போது, சாடிவயல் பகுதியிலிருந்து காந்திபுரம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டுப் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சபரிகணேசை அங்கிருந்தவர்கள்  மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் அசோகின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe