அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியவர் கைது

published 2 years ago

அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியவர் கைது

கோவை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பாஜ தலைவர் அண்ணாமலை குறித்து தகாத வார்த்தைகளால் பேசி அவதூறாக பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த பாஜ சுந்தராபுரம் மண்டல தலைவர் முகுந்தன் உள்ளிட்ட பாஜக.,வினர் நேற்று போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சமூக வலைதளத்தில் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கார் டிரைவர் கோவை நஞ்சுண்டாபுரத்தில் வசிக்கும் ரமேஷ் (53) என்பது தெரியவந்தது. அவர் மீது பொதுதளத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe