கோவையில் ஏடிஎம் மையத்தில் இருந்த பேட்டரி திருடிய மர்ம நபர்கள்

published 2 years ago

கோவையில் ஏடிஎம் மையத்தில் இருந்த பேட்டரி திருடிய மர்ம நபர்கள்

கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு எஸ்பி டவர் அருகே ஏடிஎம் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார்.

அப்போது அங்குள்ள ஏடிஎம் பேட்டரி அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது 4 பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

உடனே அவர் ஏடிஎம் சென்டர் இன்சார்ஜ் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்(36) என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் இது குறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe