கோவையில் பியூட்டி பார்லரில் விபசாரம் : ஒருவர் கைது

published 2 years ago

கோவையில் பியூட்டி பார்லரில் விபசாரம் : ஒருவர் கைது

கோவை:  கோவை பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் நேற்று அவினாசி ரோட்டில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர் இங்கு அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி விபசாரத்திற்கு அழைத்தார்.

இதுகுறித்து அந்த வாலிபர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பியூட்டி பார்லரில் விபசாரம் நடத்திய தேனியை சேர்ந்த புரோக்கர் விஜயகுமார் (40) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe