கோவையில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தற்கொலை

published 2 years ago

கோவையில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் தற்கொலை

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கேரள மாநிலம் மூணாரைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 47), எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை கணபதி மணியக்காரம்பாளையத்தில் திருமணமாகி கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். 

ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவர் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அவர் போதிய வேலை இல்லாததால் தனது குறைவான வருமானத்தால் குடும்பத்தின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜான்சன்  வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe