திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை இறைச்சி வாங்க வந்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள்

published 2 years ago

திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை இறைச்சி வாங்க வந்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள்

கோவை: தமிழகத்தில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி அரசால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளால் இறைச்சி அறுவைமனைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உள்ளாட்சித்துறை அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று  தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகள் செயல்படவில்லை. இதனால் இன்று ஆர்வமாக இறைச்சி வாங்க வந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வீட்டு தோட்டங்களில் ஆடு, கோழி வளர்ப்போர் அவர்களின் வீட்டு தேவைக்களுக்கு ஏற்ப இறைச்சிகளை வெட்டி கொண்டனர்.

இது தவிர பல்வேறு இடங்களில் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த இறைச்சி கடைகள் மூடப்பட்டு இறைச்சிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe