கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் பணியிட மாற்றம்

published 2 years ago

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் பணியிட மாற்றம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தின் 182-வது ஆட்சியராக மருத்துவர் ஜி. எஸ். சமீரன் கடந்த 2021 ஜூன் 16-ஆம் தேதி பதவியேற்றார். கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அவர் பதவியேற்றார்.

ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் இவரின் நடவடிக்கையால் கோவையில் கொரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியது. இந்நிலையில் ஆட்சியர் ஜி. எஸ். சமீரன் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாகக் கோவையின் புதிய ஆட்சியராக திருப்பூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்தி குமார் பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe