தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லாரிகள் ஓடாது ஸ்ட்ரைக்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

published 2 years ago

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லாரிகள் ஓடாது ஸ்ட்ரைக்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூறுகையில்:
"அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம வள டெண்டர் எடுத்தவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாகக் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கின்றன.

போலீசாரம் போக்குவரத்துத் துறையினரும் லஞ்சம் பெற்று வாகனங்களை விடுவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்குத் தீர்வு கோரியும், அதிக விபத்துக்கள் நடைபெறும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணல் லாரிகளை இயக்க மாட்டோம் என்றும் இந்த போராட்டம் நடைபெறுகிறது." என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe