தனது காதலியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்ட பட்டதாரி வாலிபர் கைது

published 2 years ago

தனது காதலியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்ட பட்டதாரி வாலிபர் கைது

கோவை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ், 23, 'கிராபிக்ஸ்' தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு படித்தவர்.

இவருக்கும் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் இருந்தது. தினேஷ்-ன் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால், அந்த பெண் காதலை முறித்துக் கொண்டார். ஆத்திரம் அடைந்த தினேஷ், காதலியின் படங்களை ஆபாசமாக இருப்பது போல 'மார்பிங்' செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், கோவை சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார். ஆய்வாளர் அருண், எஸ். ஐ. கருப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், வாலிபர் தினேஷ் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட வாலிபரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe