தமிழ்நாட்டில் கன மழை எச்சரிக்கை: தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

published 2 years ago

தமிழ்நாட்டில் கன மழை எச்சரிக்கை: தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

கோவை: வங்கக்கடலில் கடந்த 28-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் தென், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இலங்கை கடற்கரை பகுதியைக் கடக்கக்கூடும் என்றும், இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் 2 தினங்களுக்கு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe