மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

published 2 years ago

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

கோவையின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: 

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் (வயது 65). இவரும் இவரது மகன் யோபேஷ் (35), யோபேஷின் மகள் அனாமிகா (எ) அம்மு (9) மற்றும் உறவினர்கள் தாமஸ் (68), ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16-ந் தேதி வயாநாட்டிலிருந்து வேளாங்கண்ணிக்குச்  சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊட்டி வழியாக ஊர் திரும்பினர். காரை யோபேஸ் ஓட்டி வந்தார். 

இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் 3வது கொண்டை ஊசி வளைவு அருகில் கார் சென்றது. அப்போது கார் திடீரென  கட்டுப்பாட்டை இழந்த 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜோஸ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம் மற்றும் போலீசார் காரில் படுகாயங்களுடன் இருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe