நீலகிரியில் மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கு நிற்கும் வாகன ஓட்டிகளால் விபரீதம்

published 2 years ago

நீலகிரியில் மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கு நிற்கும் வாகன ஓட்டிகளால் விபரீதம்

கோவை: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை முள்ளி காரமடை மார்க்கமாகச் செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி ஒட்டியுள்ள சாலை ஆகும்.

இச்சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில் காரமடை வழியில் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகக் கவனத்துடன் செல்ல வேண்டிய இச்சாலையில் ஒரு சிலர் இன்று கெத்தை மாரியம்மன் கோயில் அருகே 5 காட்டு யானைகளுடன் பைக் மற்றும் வாகனங்களை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுபோதையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe