மான் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு ருசி கண்டவர்களுக்கு 75 ஆயிரம் அபராதம் விதிப்பு

published 2 years ago

மான் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு ருசி கண்டவர்களுக்கு 75 ஆயிரம் அபராதம் விதிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உலிக்கல் சுற்றுப் புளியமரத்துக்காடு ஆற்றுப்பகுதியில் இறந்துக்கிடந்த புள்ளிமான் கறியை எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லார் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (40), சிவக்குமார் (33), கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 3 பேர் மீது வன உயிரினக் குற்ற வழக்குப் பதிவு செய்து ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து சமைக்கப்பட்ட மான் இறைச்சியும் பட்டியலுடன் பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe