கோவை ரேஸ் கோர்ஸில் மற்றும் ஒரு புதிய முயற்சி: காவல் உதவி மையம் அமைப்பு

published 2 years ago

கோவை ரேஸ் கோர்ஸில் மற்றும் ஒரு புதிய முயற்சி: காவல் உதவி மையம் அமைப்பு

கோவில்: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதிலிருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

சிக்னலில் பாட்டு, ஆட்டோ நூலகம், வீடு-வீடாக சென்று குறை தீர்ப்பு, சிக்னல்களில் ரௌண்டானா அமைப்பது, காவல் நிலையங்களில் நூலகம் அமைப்பது, போக்குவரத்து காவலர் நிழற்கொடைகளில் மின்விசிறி பொருத்துவது போன்றவை இவற்றுள் சில.

இதைத் தொடர்ந்து, தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு எப்போதும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் பரபரப்பாகவே காணப்படும். காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நேரங்களில் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் அடி-தடி பிரச்சினை, காதல் ஜோடிகளின் அத்துமீறல் நடப்பதாகப் புகார் வந்து கொண்டிருந்தது. இதனைத் தடுக்கவும், பொதுமக்கள் புகார் அளிக்கவும் ஏதுவாக தற்போது இங்கு காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். காவல்துறையினர் அதனைக் குறித்துக் கொண்டு அதிகாரிகளிடம் ஒப்படைப்பர். இவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதனால் அந்தப் பகுதியில் பிரச்சினைகள் குறையும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அந்தப் பகுதியின் அடிப்படை பிரச்சினைகளையும் புகாராக அளித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe