ராம் நகரில் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

published 2 years ago

ராம் நகரில் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு

கோவை: கோவை மருதமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். மனோஜ்குமார் தனது நண்பருடன் ராம் நகரில் உள்ள நேரு வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மனோஜ் குமாரைக் கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளைப் பறித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ் குமார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உதவியுடன் மனோஜ் குமார் ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்தார். மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து அவர் பிடிபட்ட வாலிபரை காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த பிளம்பர் வேலை செய்து வரும் தினேஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 
அவர் கொடுத்த தகவல் மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், மோட்டார் சைக்கிளைப் பறித்துத் தப்பிச் சென்றது ரத்தினபுரி 7-வது வீதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வைஷ்ணவ் (24) மற்றும் நியூ சித்தாபுதூரைச் சேர்ந்த சிங்காராம் (21) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe