கோவையில் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததும் தற்கொலை செய்து கொண்ட மாணவி..!

published 2 years ago

கோவையில் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததும் தற்கொலை செய்து கொண்ட மாணவி..!

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளலாம்

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை வடவள்ளி பழனி கவுண்டன் புதூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர் போட்டோகிராபர் சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகள் தீஷா ( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) வயது 16 இவர் வெரைட்டி ஹால் ரோடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10வகுப்பு படித்து வந்தார் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது.

தீஷா 2 தேர்வுகளை எழுதி இருந்தார் இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி அவர் அறையில் திடீரென தூக்குபோட்டு தொங்கினார்

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூக்கு கயிற்றில் இருந்து தீஷாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்வு கடினமாக இருந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் பத்தாம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe