கோவையில் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த வாலிபர் கைது

கோவை: கோவையில் திருமணமாகாமல் தன்னுடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (31) . திருமணமான இவருக்கு சில ஆண்டுக்கு முன்பு ரத்தினபுரியை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில், குமாருடன் இந்த பெண் சேர்ந்து வாழ்வது அவரின் முதல் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த பெண்ணை கண்டித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரத்தினபுரியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு குமார் மற்றும் அவரது முதல் மனைவி வந்தனர். அப்போது குமாரின் மனைவிக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த குமார் தன்னுடன் லிவிங் டுகெதரில் இருந்த அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார்.

மேலும் கத்தியை காட்டி அவரை மிரட்டினார். இச்சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குமாரின் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe