கோவையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுருண்டு விழுந்து சாவு

published 1 year ago

கோவையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுருண்டு விழுந்து சாவு

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் பாரீஸ் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று சல்மான் பாரீஸ் வழக்கம் போல பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் பிருந்தாவன் சர்க்கிளில் உள்ள பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றார். 

பூங்காவிற்கு சென்ற சல்மான் பாரீஸ் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். 

இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் பூங்காவிற்கு விரைந்து சென்று சல்மான் பாரீசை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சல்மான் பாரீசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe