கோவையில் நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது வழக்கு

published 1 year ago

கோவையில் நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது வழக்கு

கோவை: நிலம் வாங்கி தருவதாக ரூ. 2 லட்சம் மோடி செய்ததாக தந்தை, மகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நீலிகோணாம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் அழகுமலை என்ற தங்கராஜ் (67). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவரது உறவினர் பாண்டி, அவரது மகன் தெய்வம் ஆகியோர் ரூ.2 லட்சத்துக்கு மதுரையில் நிலம் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிலம் வாங்க ஒப்புக்கொண்ட அழகுமலை தனது உறவினர்களான பாண்டி, தெய்வத்திடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தாக தெரிகிறது. 

ஆனால் பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும் அவர்கள் நிலம் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அழகுமலை இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், காவல் துறையினர் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் பாண்டி(57), அவரது மகன் தெய்வம்(28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe