கோவையில் சிறுமி பலாத்காரம்: உடந்தையாக இருந்தவர்கள் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

published 1 year ago

கோவையில் சிறுமி பலாத்காரம்: உடந்தையாக இருந்தவர்கள் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை

கோவை: கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா(வயது 30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் மீது கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஜோஸ்வாவிற்கு ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோஸ்வா அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். 

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜோஸ்வா அந்த சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி கோவையில் இருந்து கடத்தி சென்றார். அந்த சிறுமியை கடத்துவதற்கு ஜோஸ்வாவின் நண்பர்  சீனிவாசன் (31) மற்றும் ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இந்த நிலையில் சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஜோஸ்வா என்பது தெரியவந்தது. அன்னூரில் பதுங்கி  இருந்த ஜோஸ்வாவிடம் இருந்து சிறுமியை  காவல் துறையினர் மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக ஜோஸ்வா, அவருக்கு உதவிய சீனிவாசன், ராசுகுட்டி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன்,  திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜோஸ்வா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ராசுகுட்டி, சீனிவாசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe