கோவையில் வாலிபரை கடத்திச் சென்று கடுமையான தாக்குதல்.. 3 பேருக்கு வலை

published 1 year ago

கோவையில் வாலிபரை கடத்திச் சென்று கடுமையான தாக்குதல்.. 3 பேருக்கு வலை

கோவை: கோவையில் முன்விரோத தகராறில் வாலிபரை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் தினகரன்(20). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா உட்பட சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அவர்கள் அடிக்கடி மோதிக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினகரன் வீட்டில் இருந்தார். அப்போது செல்போனில் தொடர்பு கொண்ட கும்பல் தினகரனிடம் நேரில் பேச வேண்டும் என்று கூறி காந்திமாநகர் எப்சிஐ ரோட்டிற்கு அழைத்துள்ளனர்.

தினகரனும் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென தினகரனை பைக்கில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் தினகரனை கைகோலம்பாளையம் பகுதியில் வைத்து பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு முதுகு, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து தினகரன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யா உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe