போட்டோ எடுக்கனும்... ஆல்பம் போடனும்.. பேச்சுக்கொடுத்துக் கொண்டே செல்போனை சுருட்டியவர்கள் கைது

published 1 year ago

போட்டோ எடுக்கனும்... ஆல்பம் போடனும்.. பேச்சுக்கொடுத்துக் கொண்டே செல்போனை சுருட்டியவர்கள் கைது

கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி சங்கனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நெல்சன்(48). இவர் அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நெல்சன் ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஆல்பம் எடுக்க வேண்டும் என்று கூறி நெல்சனிடம் பேச்சு கொடுத்தார்.

பின்னர் அவரது கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடி கொண்டு தப்பி சென்றார். இது குறித்து நெல்சன் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், செல்போனை திருடியது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி பாலாஜி(33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(68). இவர் ராமமூர்த்தி ரோட்டில் ஹார்டு வேர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது செல்போனை டேபிளில் வைத்திருந்தார். அப்போது கடைக்கு வந்த மர்மநபர் நைசாக அவரது செல்போனை திருடி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், செல்போன் திருடியது சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த பெயிண்டர் சதீஷ்(29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe