கோவை மத்தியச் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்

published 2 years ago

கோவை  மத்தியச் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை மத்தியச் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.20 மணியளவில் கோவை மத்தியச் சிறையிலுள்ள தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அப்போது பணியிலிருந்த காவலர் முத்துப்பாண்டி என்பவர் எடுத்துப் பேசினார்.

அதில் பேசிய மர்மநபர் சிறையில் பணியாற்றும் காவலர்கள் சீருடை அணிந்து வெளியே வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும், கோவை மத்தியச் சிறையில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இது குறித்து காவலர் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சிறை அதிகாரிகள் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் காவல்துறையின் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டைக் கண்டுபிடிக்கும் நவீன கருவிகளுடன் கோவை மத்தியச் சிறைக்குச் சென்றனர்.

சிறை முழுவதும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் உதவியுடன்  ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெடிகுண்டு ஏதும் உள்ளதா எனத் தேடினர். ஆனால் எந்த வெடிப் பொருட்களும் கிடைக்கவில்லை. இதனால் கோவை மத்தியச் சிறையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறை காவல்துறைக்கும் மத்தியச் சிறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்துத் தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe