கோவையில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

published 1 year ago

கோவையில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

கோவை: திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், பைனான்சியர். இவரது மகன் பரத் (வயது 21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது மோட்டார் சைக்கிள் மூலம் குமரேசனின் மோட்டார் சைக்கிளைக் காலால் மிதித்து தள்ளியபடி சென்று கொண்டிருந்தார். 

மோட்டார் சைக்கிள் ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்ற போது பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கம்பி வேலிக் கல்லில் மோதி நின்றது. இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (75). சம்பவத்தன்று இவர் கோவை- காளப்பட்டி சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe