கோவையில் குப்பை அள்ளும், மன நோயாளி போல் நடித்துத் திருடும் நபரைப் பிடித்த போலீஸ்..!

published 2 years ago

கோவையில் குப்பை அள்ளும், மன நோயாளி போல் நடித்துத் திருடும் நபரைப் பிடித்த போலீஸ்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவையில் மன நோயாளி போல்  நடித்து உலோகங்களைத் திருடி பணமாக்கும் நபரைப் பிடித்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றியில் பொருத்தப்பட்ட ஏ.சி-யின் வெளிப்புற பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் கம்பிகள் திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது காப்பர் கம்பிகளை ஒருவர் திருடுவது பதிவாகியுள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிந்திருக்கின்றார். தொடர்ந்து போலீசார் ரோந்து சென்று அந்த நபரைத் தேடி வந்தனர். அப்போது ஒருவர் பிடிபடவே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த காளியப்பன் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும்,  நன்கு வளர்ந்த தாடி மீசையுடன் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் குப்பைகளைச் சேகரித்துத் தன்னை ஒரு மனநோயாளி போல் காட்டிக்கொண்ட காளியப்பன், யாரும் இல்லாத இடத்தில் இருக்கின்ற உலோகத்தைத் திருடிச் சென்று விற்று பணமாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. காளியப்பன் மீது ஏற்கனவே காட்டூர், ரத்தனபுரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டு சிறைக்குச் சென்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு முடி திருத்தம் செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe