கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (15.04.2023) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி புதூர் அருகே கஞ்சா   விற்பனைக்கு  வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று பாலமுருகன் மகன் கார்த்திக் ராஜா (20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரயில்வே ஃபீடர் சாலை அருகில் கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த  காளிதாஸ் மகன் அருள்செல்வன் (30)  என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe