கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் பரிதாப பலி

published 1 year ago

கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் பரிதாப பலி

கோவை:  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார்பாளையம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவரது மனைவி மோகனா (29). கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் இருவரும் கோவையில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். மனோஜ்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மனோஜ்குமார் தனது கர்ப்பிணி மனைவியுடன் பைக்கில் கோவைப்புதூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் மோகனா லாரியில் சிக்கி சுமார் 15 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணியாக இருந்த மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மனோஜ் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் முன்பே கர்ப்பிணி மனைவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe