கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை: கோவை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது உக்கடம் லாரிப்பேட்டை அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்த கோட்டயத்தைச் சேர்ந்த சயாத் (35) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe