பாளையங்கோட்டை ஜெயில் கைதியின் கொலையில் தொடர்புடைய 3 பேர் கோவையில் சிக்கின

published 1 year ago

பாளையங்கோட்டை ஜெயில் கைதியின் கொலையில் தொடர்புடைய 3 பேர் கோவையில் சிக்கின

கோவை: கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் நேற்று நள்ளிரவு ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் காவல் துறையினர் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். 

இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்த மாடசாமி (வயது 27), அவரது தம்பி சுபாஷ் (வயது 25), அதே ஊரைச் சேர்ந்த பசும்பொன் (வயது 27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மூன்றடைப்பை சேர்ந்தவரான முத்து மனோ (28) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. 3 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அவர்கள் கூலிப்படையாக கோவைக்கு வந்தார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe