விஞ்ஞானியின் மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

published 1 year ago

விஞ்ஞானியின் மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

கோவை: மாஜி விஞ்ஞானியின் மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் தனசெல்வன் (57). இவர் சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். அப்போது கோவையை சேர்ந்த பிர்தோஷ், சலாவுதீன் ஆகியோரின் அறிமுகம் தனசெல்வனுக்கு கிடைத்தது. அப்போது இருவரும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் உங்கள் மகனுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.23.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதை நம்பிய தனசெல்வன் அவர்களிடம் ரூ.23.50 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், பணத்தை பெற்ற பின்பு, தனசெல்வனின் மகனுக்கு அவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க கல்லூரியில் சீட் வாங்கி தரவில்லை.

பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. தனசெல்வன் தான் கொடுத்த பணத்தை கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். பின்னர் அவர்கள் ரூ.3.50 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.20 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.

இதனால், ஏமாற்றமடைந்த தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த பிர்தோஷ், சலாவுதீன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe