கோவையில் துணை ஆய்வாளரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்

published 1 year ago

கோவையில் துணை ஆய்வாளரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்

கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவல் துறையினருக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் கோவை மாநகர, மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இவர் கடந்த 16-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். செல்வகுமார் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

பாதுகாப்பு அதிகம் இருக்கும் காவலர் பயிற்சி வளாகத்திற்குள் நுழைந்து, சிறப்பு துணை ஆய்வாளரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் கோவை காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe