தாபா சென்ற நண்பர்களுக்கு அடி.!

published 1 year ago

தாபா சென்ற நண்பர்களுக்கு அடி.!

கோவை போத்தனூர் அன்னபுரத்தை சேர்ந்தவர் குமார்(34). தனியார் நிறுவன மேலாளர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எல் அண்ட் டி பைபாசில் உள்ள ஒரு தாபாவுக்கு சென்றார்.

பின்னர் அங்கு மது அருந்தி விட்டு குமார் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பின்னர் அவர் மேட்டூர் கார்மெல் நகர் அருகே பைக்கை நிறுத்தி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் யார் நீ, எதற்காக இங்கே நிற்கிறாய்? என கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி குமாரை தாக்கினர்.

இது குறித்து குமார் தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். இதனையடுத்து அங்கிருந்து சென்ற 3 பேரும் சிறிது நேரத்தில் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கும், குமார் உள்பட அவர்களது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து கத்தியால் குமாரை குத்த முயன்றனர். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் செல்வராஜ் என்பவருக்கு நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

பின்னர் 3 பேரும் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். காயமடைந்த செல்வராஜ் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், தாக்குதலில் ஈடுபட்டது செட்டிபாளையம் ரோடு அன்பு நகரை சேர்ந்த டிரைவர்கள் அந்தோணி ராஜசேகர்(26), தூத்துக்குடியை சேர்ந்த விஜய்(26) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அந்தோணி ஜோசப்(23) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe