மின்வேலி பட்டு பழங்குடியின வாலிபர் பலி: தோட்ட அதிபர் குடும்பத்துடன் தலைமறைவு

published 1 year ago

மின்வேலி பட்டு பழங்குடியின வாலிபர் பலி: தோட்ட அதிபர் குடும்பத்துடன் தலைமறைவு
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சி மேல்பாவியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் தென்னங் கள்ளும் விற்று வந்துள்ளார். இது வனப்பகுதியையொட்டி உள்ளதால் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிப்பதற்காக காளியூரைச் சேர்ந்த பழங்குடியின வாலிபரான ஜெயக்குமார் (34) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சிறிது நேரத்தில், அவருடன் வந்தவர்கள் கள் குடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ஜெயக்குமாருக்கு அதிக போதை ஏற்பட்டதால் அங்கேயே படுத்து விட்டார். இந்நிலையில் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார் எழுந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார். அப்போது யானைகள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் மின் இணைப்பு இருந்தது தெரியாததால், அதில் விழுந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, காரமடை ஆணையாளர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை காவல் துறையினர் தோட்ட உரிமையாளரான குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியான தகவல் அறிந்ததும் குப்புசாமி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe