சிங்காநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தல் : 1050 கிலோ அர்சி பறிமுதல்

published 1 year ago

சிங்காநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தல் : 1050 கிலோ அர்சி பறிமுதல்

கோவை: கோவை சிங்காநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், நேற்று இரவு கோவை சிங்காநல்லூர் அருகே பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுக்கரை குமிட்டிபதி அர்ஜூனர் காலனியை சேர்ந்த வல்லரசு(25), மற்றும் வேலந்தாவளத்தை சேர்ந்த நல்ல மணி(23) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 21 மூட்டைகள் அடங்கிய 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாகன உரிமையாளர் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe