விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்குக் கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி

published 2 years ago

விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்குக் கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: நேற்று முன்தினம் உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரிக்கு 14 பேர் வேனில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து  வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த  தனியார் ஆங்கில நாளிதழின் (தி இந்து) செய்தியாளர் கார்த்திக் மாதவன்(45) உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கார்த்திக் மாதவனின் உயிரிழப்புக்குத் தமிழக முதல்வர் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், செய்தி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் பலரும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். 

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா, மாநகராட்சி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe