ஆயில் வாங்கி ரூ.4 லட்சம் மோசடி.. கோவை வியாபாரி மீது வழக்கு

published 1 year ago

ஆயில் வாங்கி ரூ.4 லட்சம் மோசடி.. கோவை வியாபாரி மீது வழக்கு

கோவை:  கோவையில் தனியார் நிறுவனத்தில் ஆயில் வாங்கி ரூ. 4.80 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூரில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ ஏஜேன்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவையை சேர்ந்த ஆயில் கடை உரிமையாளர் அனித் நிர்மல் ராஜ்(43) என்பவர் ரூ. 6.80 லட்சத்துக்கு ஆயில் வாங்கினார்.

பின்னர் அதற்கு உண்டான தொகைக்கு 5 காசோலைகளை நிறுவனத்தினரிடம் கொடுத்தார். அவர்கள் அந்த காசோலையை வங்கியில் செலுத்தி ரூ. 2 லட்சம் எடுத்தனர். மீதமுள்ள 4 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியது.

இதனை தொடர்ந்து நிறுவனத்தினர் அனித் நிர்மல் ராஜிடம் நீங்கள் கொடுத்த காசோலைகளில் பணம் இல்லை. எனவே மீதமுள்ள ரூ. 4.80 லட்சத்தை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இது தொடர்பாக ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தினர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் அனித் நிர்மல் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe