ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே போதை மாத்திரை விற்பனை.. வாலிபர் கைது

published 1 year ago

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே போதை மாத்திரை விற்பனை.. வாலிபர் கைது

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்தின்பேரில், அங்கிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை செய்த போது அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடம்பட்டி நம்பிஅழகன் பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் விஷ்ணு(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் 10 சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்ணுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe