குடிபோதையில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

published 1 year ago

குடிபோதையில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

கோவை: கோவை கெம்பட்டி காலனி 7வது தெரு பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி உத்ர ஜெயலட்சுமி(39). இவரது வீட்டு முன்பு நேற்று முன்தினம் அவரது உறவினர் கலியலிங்கம் என்பவர் நின்றிருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணகுமார்(39) குடிபோதையில் வந்தார். அவர் கலியலிங்கத்திடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு உத்ர ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அவர் குடிபோதையில் தகராறு செய்த கிருஷ்ணகுமாரை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியால் உத்ர ஜெயலட்சுமியை குத்த முயன்றார். இதனை அவர் தடுத்த போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் வெளியே ஓடி வந்தார்.

பின்னர் கிருஷ்ணகுமார் இருவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். காயமடைந்த உத்ர ஜெயலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக உத்ர ஜெயலட்சுமி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் பெண்ணை கத்தியால் குத்திய கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe