வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

published 1 year ago

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

கோவை: கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரன்(44). தள்ளுவண்டியில் பெல்ட், மணிபர்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

 அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பெல்ட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார்

. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் ரூ.300ஐ பறித்து கொண்டு தப்பிக்க முயன்றார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஷ்வரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

 விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது சவுரிபாளையம் இந்திராநகரை சேர்ந்த ஜோதிபாசு (25) என்பது தெரியவந்தது.

 போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe