மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பலி

published 1 year ago

மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பலி

கோவை: போக்சோ வழக்கில் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பன்(72). இவரை கடந்த 2016ம் ஆண்டு போக்சோ வழக்கில் காங்கயம் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மேலும் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டார்.

 இந்நிலையில், கடந்த 27ம் தேதி அவரை சிறை நிர்வாகத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 அங்குச் சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

 ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe