கோவையில் ஓடும் பஸ்சில் சலவை தொழிலாளி 'திடீர்' சாவு

published 1 year ago

கோவையில் ஓடும் பஸ்சில் சலவை தொழிலாளி 'திடீர்' சாவு

மதுரையைச் சேர்ந்தவர்
கோவை: மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் பெரியசாமி(50). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் சலவைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இவர் நேற்று காலை திருச்சூரிலிருந்து மதுரை செல்வதற்காகக் கேரள அரசு பஸ்சில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். இந்த பேருந்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது.

 அப்போது பெரியசாமி இறங்காமல் சீட்டிலேயே அமர்ந்திருந்தார். இதனால் தூங்கிக் கொண்டு வருகிறார் என்று நினைத்த பேருந்து கண்டக்டர் அபூபக்கர் சித்திக் அவரை எழுப்ப முயன்றார்.

 ஆனால் அவர் மூச்சு, பேச்சின்றி கிடந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

 சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாகப் பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பெரியசாமி இறந்தது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe