கூட்டு சேர்ந்து மது குடித்த நண்பர்கள், போதை தலைக்கேறியதும் அடிதடியில் அலப்பறை..!

published 1 year ago

கூட்டு சேர்ந்து மது குடித்த நண்பர்கள், போதை தலைக்கேறியதும் அடிதடியில் அலப்பறை..!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் அங்காளகுறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜ் (33). சம்வத்தன்று இவர்கள் 2 பேரும் சேர்ந்து மது குடித்தனர்.

போதையில் தலைக்கேறிய நிலையில் இருந்த 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் மாறிமாறி தென்னை மட்டையால் தாக்கி கொண்டனர்.

இதில் கார்த்திக், ஆனந்தராஜ் ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் 2 பேரும் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe